தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் “ரெட்ரோ” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மே 1-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் “சூர்யா 45” படத்தில் நடித்து வருகிறார்.

இச்சமயத்தில், “வாடிவாசல்” படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டைப் மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்காக சூர்யா, மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்வது போன்ற வீடியோவை சில ஆண்டுகளுக்கு படக்குழு வெளியிட்டது. சமீபத்தில், இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு, படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
தற்போது, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், “வாடிவாசல்” படத்திற்கான பாடல் இசையமைப்புப் பணிகளை தொடங்கிவிட்டோம் என கூறியுள்ளார். இந்நிலையில் விரைவில், இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.