செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விக்ரம் பிரபு மற்றும் அக்ஷய் நடித்துள்ள ‘சிறை’ படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். இதன் கதையை ‘டாணாக்காரன்’ தமிழ்ச் செய்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஒரு காவல்துறை அதிகாரியும், விசாரணைக் கைதியும் சந்திக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டது இப்படம். விக்ரம் பிரபு நாயகனாகவும், அனந்தா நாயகியாகவும் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்; அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். படப்பிடிப்பு சென்னை, வேலூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
தற்போது, விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சிறை’ திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.