Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don't worry, we respect your privacy and won't spam your inbox. Your information is safe with us.

News

Company:

Tuesday, March 11, 2025

Touring Talkies

ராணா டகுபதி தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாத்தி பட நடிகை… பிரம்மாண்டமாக நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு பூஜை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை சம்யுக்தா மேனன். கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த தமிழ், தெலுங்கு இரு மொழிப் படமான “வாத்தி” படத்தில் அவர் ஜோடியாக நடித்தார். அதில், அவரின் அடியாத்தி இது என்ன பீலு என்ற பாடல் பட்டி தொட்டிகளில் மிகவும் பிரபலமானது. இவருக்கு மலையாளம், தமிழை விட தெலுங்கில் அதிகப்படியான பட வாய்ப்புகள் வருகின்றன. சம்யுக்தா தற்போது தெலுங்கில் மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையிலே, சம்யுக்தா நடிகர் ராணா டகுபதி தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை, ஆனால் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர் ராணா கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார். இந்த படத்தை யோகேஷ் கேஎம்சி இயக்குகிறார்.

படம் குறித்துச் சம்யுக்தா பேசுகையில், “நான் பல படங்களில் பிஸியாக இருந்ததால், இந்தக் கதையை கேட்க நேரம் கிடைக்கவில்லை. ஆனால், இயக்குநர் யோகேஷ் என்னிடம் கதையை சொல்லும் போது நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். இந்த படம் கதாநாயகியை மையமாகக் கொண்டது, இது எனக்குப் பெரும் வாய்ப்பு” என்று தெரிவித்தார்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளப் படமான “அய்யப்பனும் கோஷியும்” படத்தின் தெலுங்கு ரீமேக்கான “பீம்லா நாயக்” படத்தில் நடிகர் ராணாவின் மனைவியாக சம்யுக்தா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News

Hide WhatsApp Form
<p>How can I help you? :)</p>