பூரி ஜெகநாத் இயக்கத்தில் தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

அதே இடத்தில், அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி – நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘மன சங்கர வர பிரசாத் கரு’ என்ற படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிரஞ்சீவியின் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத், தபு மற்றும் சார்மி சென்று அவர்களை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது இரு படக்குழுவினரும் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக உரையாடி கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.