பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகியான சுனந்தா சர்மா, பஞ்சாப் திரைப்படத்தில் நடிகையாகவும் நடித்துள்ளார். இவர் பாடிய பஞ்சாபி பாடல்கள் யூடியூபில் ஆல்பமாக வெளியீடு செய்யப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், பாடகி சுனந்தா சர்மா தற்போது இங்கிலாந்தின் தலைநகர் லண்டனுக்கு சுற்றுலா பயணமாக சென்றுள்ளார். அங்கு ஒரு வணிக வளாகத்தின் தரைதளத்தில் தனது சொகுசு காரை நிறுத்திவிட்டு, நண்பர்களுடன் செல்லும் நிகழ்வில் ஈடுபட்டுள்ளார்.
அவர் திரும்பி வந்தபோது, தனது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, காருக்குள் இருந்த அனைத்து பொருட்களும் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். காரிலிருந்த 2 பைகள், ஒரு சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்கள், மொத்தம் ரூ.1 லட்சத்திற்கு மேல் மதிப்புடையவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சுனந்தா சர்மா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என லண்டன் போலீசாரிடம் அவர் முறையிட்டுள்ளார்.