Tuesday, October 1, 2024

100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்த டோவினோ தாமஸ்-ன் ஏ.ஆர்‌.எம்…ரசிகர்கள் கொண்டாட்டம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், ‘மின்னல் முரளி’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அவரின் கதாபாத்திரத் தேர்வு விதவிதமாக இருப்பதால், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். தமிழில், தனுஷ் நடித்த ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

தற்போது, டோவினோ தாமஸ் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ (ஏ.ஆர்.எம்) என்ற படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜித்தின் லால் இயக்கியுள்ளார், மேலும் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி இந்த படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார். பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, ரோகினி, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘ஏ.ஆர்.எம்’ திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி, கடந்த 12ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. டோவினோ தாமஸ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் இந்தப் படத்தில் தோன்றியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி ஷெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளிவந்தது. படக்குழுவின் அறிவிப்பின்படி, இப்படம் 13 நாட்களில் ரூ.87 கோடி வசூலித்துள்ளது, மேலும் உலகளவில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News