சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் உரையாற்றியபோது, இப்போது ஒரு படம் ஹிட் ஆனால் வெற்றி விழா நடத்துவது வழக்கம். ஆனால் என் முதல் படம் ‘சித்திரம் பேசுதடி’ ஆரம்பத்தில் 7 நாட்களே ஓடியது. பின்னர் தான் ஹிட் ஆனது. அதேபோல் படங்களுக்கு தலைப்பு வைப்பது, டிசைன் செய்வது ஒரு தனி கலை. அதில் மணிரத்னம் வல்லவர். அவரின் படங்களின் தலைப்பும் வடிவமைப்பும் பார்வையாளர்களை உடனே கவரும்.

அதேபோல், ஒரு இயக்குனர் தனது ஹீரோயின்களுக்கு பெயர் வைப்பதில் கூட ஒரு ரகசியம் இருக்கும். அவருக்கு பிடித்த பெயரை நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்தால், அதையே பயன்படுத்துவார். என் முதல் படம்‘சித்திரம் பேசுதடி’யில் ஹீரோயின் பெயர் சாரு. அது சத்யஜித் ரே படத்தின் பாதிப்பில் வைத்தது.
இப்போது நான் நடிகராகவும் சில படங்களில் நடித்து வருகிறேன். அந்த வாழ்க்கை எனக்கு மிகுந்த சந்தோஷம் தருகிறது.படக்குழுவினர் என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள் எனப் பேசினார்.

