நடிகை ஆண்ட்ரியா கவின் நடிப்பில் ‘மாஸ்க்’ என்ற படத்தை தயாரித்து, அதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் மாற்றியுள்ளார். தயாரிப்பாளர் ஆனது குறித்து அவர் சமீபத்திய பேட்டியில், இதுவரை 35க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளேன். இந்த கதை நன்றாக இருந்ததால், தயாரிக்கிறோம். இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு சம்பாதித்து வீடு கட்டினாய், அதை வைத்து லோன் வாங்கி படம் தயாரிக்க வேண்டுமா நீ பைத்தியமா என்று பலரும் கேட்டார்கள். சினிமாவில் சம்பாதித்துதானே அதை வாங்கினேன் என்றேன்.

நான் நடித்த ‘மனுசி, பிசாசு 2’ படங்கள் இன்னும் வெளியாக தாமதமாகிறது அது வருத்தம். நான் ஹீரோயினாக நடித்த இன்னொரு படமும் ரிலீஸ்க்கு வரவில்லை. என் திறமையை காண்பிக்க இந்த படம் நடித்துள்ளேன் என்று கூட சொல்லலாம். கதையும் நன்றாக இருந்ததால் தயாரிப்பில் இறங்கிவிட்டேன். இந்த படம் வெற்றி பெற்று லாபம் வந்தால், மிஷ்கின் இயக்கத்தில், என் நடிப்பில் முடங்கி இருக்கும் ‘பிசாசு 2’ படத்தை வெளியிட முயற்சி செய்வேன்.
நடிப்பு, தயாரிப்பு பணிகளை விட, பாடுவதுதான் எனக்கு பிடித்து இருக்கிறது. நான் நடித்ததில் ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குதான் மிகவும் கஷ்டப்பட்டேன். அந்த படத்தில் பல காட்சிகள் 26 டேக்வரை போனது. மாஸ்க் படத்தில் கவின் நடிப்பு நன்றாக இருக்கும் உள்ளது ‘வட சென்னை’யின் இன்னொரு பகுதியாக ‘அரசன்’ எடுக்கப்படுகிறது. அதில் நான் நடிக்கலாம் என்று கூறியுள்ளார்.

