சீதாரே ஜமீன் பர் திரைப்பட வெளியீட்டிற்காக தயாராகிக் கொண்டிருக்கும் நடிகை ஜெனிலியா, “8 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வது கடினமாக இருக்கலாம், ஆனால் அது முடியாத காரியமல்ல” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், 8 மணி நேர வேலைக்கான கோரிக்கையையடுத்து, சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் ஸ்பிரிட் திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோனே விலகியிருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்த தனது எண்ணங்களை ஜெனிலியா ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில், இது ஒரு கடினமான விஷயம்தான், ஆனால் முடியாதது அல்ல. தாய்மார்களுக்கு இது மிகவும் சிரமமானதாக இருக்கலாம், ஆனால் அதை சமாளிக்க இயலும். நான் ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வேலை செய்கிறேன். சில நாட்களில், இயக்குநர் அதை 11 மணி அல்லது 12 மணிநேரம் வரை நீட்டிக்கக் கோரக்கூடும். எனக்கு அது நியாயமானதாகத் தோன்றுகிறது” என்று கூறினார்.