Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

ஒரு படத்தில் மறையும் கதாப்பாத்திரம் என்றாலே என் பெயரை எழுதி விடுகிறார்கள்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் கலையரசன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் கலையரசன், “மெட்ராஸ்” படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு, “அதே கண்கள்,” “குதிரைவால்,” “ஹாட் ஸ்பாட்,” “ராஜா மந்திரி” போன்ற சில படங்களில் மட்டுமே அவர் கதாநாயகனாக நடித்தார். இவை தவிர, “சார்பட்டா பரம்பரை,” “கபாலி,” “ஜகமே தந்திரம்,” “வாழை,” “தேவரா” போன்ற பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்த படங்களில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இறந்து போகும் வகையில் அமைந்திருப்பதால், சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்கள் கலையரசனை கலாய்த்து, “கலையரசன் கதாபாத்திரம் வந்தாலே இறந்து விடும்” என மீம்கள் உருவாக்கினர்.

இந்நிலையில், மெட்ஸ்காரன் திரைப்பட விழாவில் கலையரசன் மேடையில் பேசியபோது, “ஒரு படத்தின் கதையை உருவாக்கி எழுதும்போதே, சாகும் கதாபாத்திரமாக அமைக்க வேண்டும் என்றால், என் பெயரை எழுதிவிடுவார்கள் போல தோன்றுகிறது. இனி நான் இரண்டாம் கட்ட கதாநாயகனாக நடிக்க மாட்டேன். முதன்மை கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News