சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை அனன்யா பாண்டே, நான் என் சினிமா பயணத்தைத் தொடங்கும்போது எனக்கு 18-19 வயதிருக்கும். உங்களுக்குத் தெரியும் அப்போது நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன், எல்லோருமே அதுகுறித்து கிண்டல் செய்தனர். ‘ஓ… உனக்கு இருப்பது கோழி கால்கள், நீ தீக்குச்சி போல இருக்கிறாய், உனக்கு இது இல்லை அது இல்லை என முதலில் கிண்டல் செய்தனர். பின்னர், நான் வளர வளர நான் சிறப்பானவளாக ஆனேன். விமர்சனங்களை கடந்து இன்று நல்ல நிலையில் உள்ளேன். நீங்களும் விமர்சனங்களை ஒரு பொருட்டாக நினைக்காதீர்கள் முன்னேறுங்கள் என்றுள்ளார்.
