மன அழுத்தத்தில் இருக்கும்போது உதவி கேட்பதில் தவறு எதுவும் இல்லை என்றும், அதை பலவீனமாகக் கருத தேவையில்லை என்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசுகையில், மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவது பலவீனத்தைக் குறிக்காது, மாறாக வளர்ச்சிக்கு உதவுகிறது என்று சாரா அலிகான் தெரிவித்தார். மேலும் மனதைக் கவனித்துக்கொள்வது உடலை பராமரிப்பது போலவே முக்கியமானது என்பதை உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.
கேதார்நாத் திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய சாரா அலிகான், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பாலிவுட் நடிகர் சைப் அலி கான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.