1995ஆம் ஆண்டு வெளியான ‘முறை மாப்பிள்ளை’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். சமீபத்தில், இவரது நடிப்பில் பொங்கல் விழாவை ஒட்டி வெளியான ‘வணங்கான்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த வெற்றிக்கு பின்னர், அருண் விஜய், கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கிறது, மற்றும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சாம்.சி.எஸ்.
இந்த திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாவதற்குத் தயாராகி வருகிறது. இதற்கிடையில், தனுஷ் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதன் பின்னணியில், அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இப்படம் தொடர்பான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “படத்தில் பெரிய ஆச்சரியமான விஷயம் ஒன்று உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.