Touring Talkies
100% Cinema

Monday, May 19, 2025

Touring Talkies

எஸ்டிஆர் 51 படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையே, சிம்புவின் பிறந்த நாளையொட்டி அவரின் மூன்று புதிய படங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகின.

அந்தவகையில், சிம்பு அடுத்ததாக ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநரான ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ‘எஸ்டிஆர் – 49’ படத்தில் நடிக்கிறார். அதற்குப் பிறகு, ‘தரமணி’, ‘எண்ணெய் அறைந்தா நாயகன்’ போன்ற படங்களை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் ‘எஸ்டிஆர் – 50’ படத்திலும் நடிக்க உள்ளார்.

மேலும், ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். ஆரம்பத்தில் ‘எஸ்டிஆர் – 51’ என தற்காலிகமாக அழைக்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த படத்திற்கு ‘காட் ஆப் லவ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் கோடை விடுமுறைக்குள் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஏஜிஎஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு நிகழ்வில் பேசியதாவது: “‘எஸ்டிஆர் – 51’ திரைப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. படத்தின் கதையே மிகவும் சுவாரஸ்யமானது. இது எஸ்டிஆர் ரசிகர்களுக்கு பெரும் திருப்தியை அளிக்கும். கதாநாயகி தேர்வு முடிந்துவிட்டது. படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் தொடங்கும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து படத்தின் அப்டேட்கள் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News