‘ஏஸ்’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘தலைவன் தலைவி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதில் பாலிவுட் நடிகை தபு முக்கிய வேடத்திலும், ‘வாத்தி’ படத்தின் மூலம் அறிமுகமான சம்யுக்தா நடிக்கின்றனர். இந்தப் படத்தை பூரி ஜெகந்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. முழுக்க முழுக்க கமர்ஷியல் கதையமைப்பில் உருவாகும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.