பிரம்மாண்டமான ‘பாகுபலி’ மற்றும் ‘RRR’ போன்ற படங்களை இயக்கி புகழ் பெற்ற இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கி உள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இணைந்து நடிக்கிறார்கள். ‘SSMB29’ என தற்காலிகமாக இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இப்படம் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்திற்காக, ஒடிஸா மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பார்வையாளர்கள் வருகை தராத பகுதிகளை படப்பிடிப்பு இடங்களாக இயக்குநர் ராஜமௌலி தேர்வு செய்துள்ளார். இதற்காக 500 பேர் கொண்ட குழுவினரை ஒடிஸாவிற்கு அழைத்து, அவர்கள் அனைவரும் வேலை செய்வதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பு நிறுவனம் செய்துள்ளது. மேலும், ஒடிஸா மாநிலத்தின் செமிலிகுடா பகுதியில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் படக்குழுவினருக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படப்பிடிப்பு மார்ச் 28ஆம் தேதி வரை தொடரவுள்ளதாகவும், தியோமாலி மற்றும் தலமாலி மலைகளில் திரைப்படத்திற்கான முக்கியக் காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் படத்திற்காக பழங்குடி கலாசாரத்திற்கும், இயற்கை அழகுக்கும் பெயர்பெற்ற கோராபுட் மாவட்டத்தில் படக்குழுவினர் தற்போது முகாமிட்டுள்ளனர்.
இதே நேரத்தில், பிரியங்கா சோப்ரா மும்பையில் நடந்த தனது சகோதரர் சித்தார்த் சோப்ராவின் திருமணத்தில் கலந்து கொண்ட பின், படப்பிடிப்பில் இணைந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரியங்கா சோப்ரா தென்னிந்திய திரைப்படத்திற்குத் திரும்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.