Touring Talkies
100% Cinema

Monday, May 5, 2025

Touring Talkies

எனக்கு இந்த அளவிற்கு புகழ் கிடைக்க முக்கிய காரணம் மோகன்லால்… ‘தொடரும்’ பட வில்லன் பிரகாஷ் வர்மா !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டூயட்’ படத்தில் பிரகாஷ்ராஜ், ‘தில்’ படத்தில் ஆசிஷ் வித்யார்த்தி போன்ற சிலர் தங்கள் முதலாவது படத்திலேயே வில்லனாக நடித்துப் பார்வையாளர்களிடையே “யாருய்யா இந்த வில்லன்!” என்று பேசப்படுவதை பெற்றவர்கள். அந்நிலையில், சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘தொடரும்’ திரைப்படத்தில் ஜார்ஜ் சார் என்ற காவல் துறை அதிகாரியின் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ் வர்மா, ரசிகர்களிடம் தனது பெயரைக் கட்டியெழுப்பியுள்ளார். அவர் நடித்த இந்த முதல் படமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, “யார் இந்த ஜார்ஜ் சார்?” என்று இணையத்தில் தேடும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார்.

இவர் சினிமா உலக புதிய வரவு அல்ல. ஏற்கனவே பல விளம்பர படங்களை இயக்கியவர். ரசிகர்கள் மனதில் உறைந்த வோடபோன் விளம்பரத்தை இயக்கியவரும் இவர்தான். சில திரைப்படங்களில் கலைத் துறையிலும் பங்களித்துள்ளார். ஆனால் இவ்வளவு நாள் கேமராவின் பின்னால் இருந்தவரை, இயக்குனர் தருண் மூர்த்தி ‘தொடரும்’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகப்படுத்தினார். அவரது நம்பிக்கையை உரியவாறு நிரூபித்துப் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு பிரகாஷ் வர்மாவும் அந்த வேடத்தில் பூரணமாக உயிர்ப்பித்துள்ளார்.

தனக்கு இந்த அளவிற்கு புகழ் கிடைத்ததற்கு முக்கிய காரணம் மோகன்லால் என்று தெரிவித்தார் பிரகாஷ் வர்மா. “அவர் எந்த ஒரு ஈகோவுமின்றி எனக்குத் தேவையான நடிப்புச் சுதந்திரத்தை அளித்ததோடு, நடிப்பு தொடர்பான பல நுணுக்கங்களை எனக்கு கற்றுத் தந்தார். எனது ஹீரோவாகவும், எனது உத்வேகமாகவும், வழிகாட்டியாகவும், சகோதரராகவும், ஆசிரியராகவும், நண்பராகவும் இருந்தவர் மோகன்லால் சார் தான்” என பெருமையாக கூறியுள்ளார் நடிகர் பிரகாஷ் வர்மா.

- Advertisement -

Read more

Local News