Friday, September 27, 2024

வேட்டையன் படத்தின் இடைவேளை வித்தியாசமாக இருக்கும்… கலை இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்! #VETTAIYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “வேட்டையன்” திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வர இருப்பதால், தற்போது ப்ரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதுடன், படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, “வேட்டையன்” படத்தின் கலை இயக்குனர் கதிர், படத்தைப் பற்றி ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “வேட்டையன்” படத்தின் இடைவேளை மிகவும் வித்தியாசமாக இருக்கும், இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதேபோல், ரஜினியின் தொடக்க காட்சி மாஸாக இருக்கும், இது அவரது ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும். சண்டைக்காட்சிகளில் கூட, ரஜினி மிகுந்த உற்சாகத்துடன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் கிளைமேக்ஸ் யாரும் எதிர்பார்க்காத விதமாக இருக்கும். பொதுவாக, கிளைமேக்ஸ் போது ஒரு சண்டைக்காட்சி நடைபெறும். ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லை. முற்றிலும் வித்தியாசமான கதை வடிவத்துடன் உருவாகியுள்ளதைக் குறிப்பிட்டார்” என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News