பொதுவாக, மலையாள திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுவதில்லை. காரணம், தமிழ் மக்களுக்கு மலையாள மொழியை புரிந்துகொள்ளுவது எளிதாக இருப்பதே ஆகும்.

பெரிய பட்ஜெட் கொண்ட திரைப்படங்கள் மட்டுமே தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். மற்ற திரைப்படங்கள், ஓடிடி தளங்களில் வெளியானபோது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வரும்.இந்நிலையில், மலையாளத்தில் வெளியானதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஆபீசர் ஆன் டூட்டி திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு நாளை (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை E4 Entertainment நிறுவனம் வெளியிடுகிறது.
போலீஸ்-கிரைம் திரில்லர் வகைச் சேர்ந்த இப்படத்தில் குஞ்சாகோ போபன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடைய மனைவியாக பிரியாமணி நடித்துள்ளார். மேலும், ஜெகதீஷ், விஷாக் நாயர், மீனாட்சி அனூப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தை ஜித்து அஷ்ரப் இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ரூபி வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.