விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி மீண்டும் வெளியிடப்படுகிறது. படத்தின் மறுவெளியீட்டை முன்னிட்டு, நேற்று சென்னை கமலா திரையரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் பலரும் கலந்து கொண்டு, விஜயகாந்துடன் கொண்டிருந்த இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முருகதாஸ், “கேப்டன் பிரபாகரன் என் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படம். கள்ளக்குறிச்சியில் இந்த படம் 100 நாட்கள் ஓடியது. அதில் தொடர்ந்து 10 நாட்கள், தினமும் திரையரங்கிற்கு சென்று படத்தைப் பார்த்தேன். இந்த படத்தின் திரைக்கதை எனக்குப் பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது. குறிப்பாக, 19 நிமிடங்கள் கடந்த பிறகே விஜயகாந்த் சார் திரையில் தோன்றுவது எனக்கு மிகுந்த ஈர்ப்பாக இருந்தது.
அந்தத் தோற்றம் எனது பல படங்களிலும் தொடர்ந்தது. துப்பாக்கி படத்தில் பஸ் வெடிப்பு காட்சியிலேயே கதை தொடங்குவது, இதே படத்திலிருந்து எனக்குக் கிடைத்த உந்துதல்தான். சாதாரணமாக, ஒரு படத்தில் வில்லன் இறந்துவிட்டால் கதை முடிந்து விடும். ஆனால், இந்தப் படத்தில் அப்படியில்லை. அதுவே எனக்கு ரமணா படத்திற்கான சிந்தனையாக அமைந்தது. விஜயகாந்த் சார் உடன் ஒரு படம் எடுப்பது என் கனவு. அது நடந்தது. அதுமட்டுமின்றி, என் திருமணத்தையும் அவர் நடத்தி வைத்தார். ஒரு ரசிகராக பார்த்த இந்தப் படத்தின் ரீ-ரிலீஸ் விழாவில், அதே இயக்குநருடன் இன்று பக்கத்தில் அமர்ந்திருப்பது எனக்கு கனவு நிறைவேற்றம் போன்றது என்று உ