கன்னட திரைப்படத் துறையில் முதலில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர ரிஷப் ஷெட்டி 2012 ஆம் ஆண்டு வெளியான ‘துக்ளக்’ என்ற திரைப்படம் மூலம் அவர் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானார். தற்போது, அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தரா சாப்டர் 1’ மற்றும் ‘ஜெய் அனுமான்’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் அஷ்வின் கங்காராஜு இயக்கவிருக்கிறார்.
இந்த புதிய திரைப்படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட் சார்பில், வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கவுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ரிஷப் ஷெட்டி நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தின் புதிய பட அறிவிப்பு போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.