இந்திய சினிமாவின் பிரபல நடிகை தீபிகா படுகோனே 8 மணி நேர வேலை காரணமாக சந்தீப் ரெட்டி வாங்கவின் “ஸ்பிரிட்” படத்திலிருந்து விலகினார், அதனைத்தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு புதிய நேர்காணலில் தீபிகா ,திரைப்படத் துறையிலும் 8 மணி நேர வேலையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். வாழ்க்கையில் அனைவரும் தூக்கம், உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவு ஆகிய மூன்று விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தற்போது, தீபிகா படுகோன்ஷாருக்கானின் “கிங்” மற்றும் அல்லு அர்ஜுன் – அட்லியின் (AA22xA6) ஆகிய இரண்டு பிரம்மாண்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

