கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ, தனது பெற்றோர் சி.பி. சாக்கோ மரியம் கார்மல் (63), மற்றும் தம்பி ஜோஜோன் சாக்கோ ஆகியோர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று புறப்பட்டனர். அவர்களது காரை டிரைவர் அனீஸ் (42) ஓட்டிச் சென்றார்.

பயணத்தின் போது, இந்த கார் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சென்றபோது ஒரு சரக்கு லாரியுடன் மோதியது. இந்த விபத்தில் சைன்டாம் சாக்கோ, அவரது தந்தை சி.பி. சாக்கோ மற்றும் தாயார் மரியம் கார்மல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சி.பி. சாக்கோ உயிரிழந்தார்.
இந்த விபத்துக்குப் பிறகு, ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது தாயார் திருச்சூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மத்திய மந்திரி மற்றும் நடிகர் சுரேஷ் கோபி, நேரில் சென்று ஷைன் டாம் சாக்கோவுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் கூறுகையில், லைன் ன டாம் சாக்கோவின் சகோதரிகள் இன்று இரவு வரவிருக்கின்றனர். எனவே, சி.பி. சாக்கோவின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என தெரிவித்தார்.