Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘மாவீரா’ படத்துக்காக 10 நிமிடங்களில் தயாரான பாடல்…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வி.கே புரடக்க்ஷன் வழங்கும் ‘மாவீரா’ படத்தின் இரண்டாவது பாடலுக்கான பாடலும், மெட்டமைக்கும் பணியும் நடைபெற்றது.

கவிப் பேரரசரின் புலமையும், ஜி.வி.பிரகாசின் அழகிசையும் காலமுள்ளவரை ஒலிக்கும். பத்தே நிமிடத்தில் பாட்டு தயரானது.

பட்டாம்பூச்சிக்கு
பட்டுத்துணி போட்டது போல
சிட்டாஞ்சிட்டுக்கு சேலைக் கட்டி
விட்டது யாரு?
சீனிக்கட்டியில செலை ஒன்னு
செஞ்சு வச்சது போல
எட்டா ஒயரத்தில் எச்சி ஊற
விட்டது யாரு?

வன்னித் தமிழா வாய்யா
உனக்கு வாச்சப் பொருளைத் தாயா
பச்ச முத்தம் ஒண்ணு கொடுத்தா
பற்றிக் கொள்வேன் தீயா

அடி வஞ்சிக்கொடியே வாடி
வளர்த்த பொருளத்தாடி
பாசத்த உள்ள வச்சுப்
பாசாங்க வெளிய வச்சு
வேசங்கட்டி வந்தவளே
வெறும் வாய மெல்லுறியே

மாவீரன் மண் காக்க
மானமுள்ள பெண் காக்க
அஞ்சாறுப் புலிக்குட்டி
அவசரமா வேணுமடி.

இன்னும் இன்னும் திகட்ட இப்படி நீள்கிறது பாடல்…

“இந்த ‘மாவீரா’ படம் மாபெரும் வெற்றியைப் பெறும் என்பதை இரண்டாவதாக இந்தப் பாடலும் உறுதிப்படுத்தியுள்ளது. பேராளுமைகள் இருவருக்கும் நெகிழ்ந்த நன்றிகள்.” என்கிறார் படத்தின் இயக்குநரான வ.கௌதமன்.

- Advertisement -

Read more

Local News