கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் அறிமுக இயக்குனர் பிரவீன் எஸ். விஜய் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று (செப்டம்பர் 3) நடைப்பெற்றது. இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிக்கின்றனர்.

கோர்ட்ரூம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு எதிராக வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஏ. வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.