‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகி, வெளியாக உள்ள படம் ‘அலங்கு’. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘கோலி சோடா 2’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான செம்பன் வினோத் ஜோஸ், ‘விக்ரம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் மீண்டும் கோலிவுட்டில் திரும்பி நடித்துள்ளார். மலையாள சினிமாவில், அவர் நடிகராக மட்டுமல்ல, திரைக்கதையாசிரியராகவும் அறியப்பட்டவர். ‘அங்கமலிய டைரீஸ்’ திரைப்படத்தின் கதையாசிரியராவும் அவர் தான்.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில், அன்புமணி ராமதாஸ் அவர்களின் மனைவி செளமியா அன்புமணி போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். தேர்தல் பரப்புரையின் போது, மகள் சங்கமித்ரா அவரது தாயாருக்காக பிரச்சாரம் செய்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். தற்போது சங்கமித்ரா திரைப்பட தயாரிப்பாளராக கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.