நடிகை சமந்தா, கடந்த காலத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ‘குஷி’ திரைப்படத்திற்குப் பிறகு, தெலுங்கில் தயாரித்த ‘சுபம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, ‘மா இண்டி பங்காரம்’ எனும் புதிய படத்தை தயாரித்து, அதில் கதாநாயகியாக நடிக்க திட்டமிட்டுள்ளார். மேலும், இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கும் ஒரு ஹிந்தி வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில், இயக்குநர் ராஜ் நிடிமோரை சமந்தா காதலிக்கிறார் என்ற செய்திகள் சோசியல் மீடியாவில் பரபரப்பாகப் பரவிவருகின்றன. இதுகுறித்து சமந்தா இதுவரை எந்த ஒரு மறுப்பும் வலியுறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா, சமூக வலைதளங்களில் இயல்பாகவே சுறுசுறுப்பாக இருக்கிறார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், “நாம் எதைப் பற்றி பேச தேர்வு செய்கிறோமோ, அதுவே நம்மை வடிவமைக்கும் பொருளாக மாறுகிறது” எனும் வரிகளை உடன் இணைத்துப் பகிர்ந்துள்ளார்.