‘பல்டி’ படத்திற்கு இசையமைத்ததற்காக சாய் அபயங்கருக்கு ரூ.2 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மலையாளத் துறையில் ஒரு இசையமைப்பாளருக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த சம்பளமாகும். சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சாய் அபயங்கர், ”கட்சி சேரா”, ”ஆச கூட” போன்ற பாடல்களுக்காக புகழ்பெற்றவர். இந்த பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றதால், திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
”கருப்பு”, ”டியூட்”, ”பல்டி”, ”எஸ்டிஆர் 49”, பென்ஸ், சிவகார்த்திகேயன் – ’குட் நைட்’ படங்களிலும் விநாயக் இணையும் படங்களிலும் தொடர்ந்து வாய்ப்புகள் சாய் அபயங்கருக்கு குவிந்தன. பிரமாண்ட பட்ஜெட்டில் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் அவர் இசையமைப்பாளர் ஆக ஒப்பந்தமாகி உள்ளார். ஷான் நிகாம் நடித்துள்ள ”பல்டி” படத்தின் மூலம் சாய் அபயங்கர் மலையாள சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.