தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 1ம் தேதி வெளியான படம் தான் ‘ரெட்ரோ’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஒரு சமீபத்திய பேட்டியில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சூர்யாவுடன் இன்னொரு படத்தில் இணைவது உறுதி என கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், “சூர்யா சார் உடன் மீண்டும் இணைவேன் என்பது உறுதி. அந்த படம் என்னுடைய கனவு படம். பெரிய பட்ஜெட் தேவைப்படும். அதற்கு நிறைய நேரமும் தேவைப்படும். சூர்யா சார் மற்றும் எனது தற்போதைய வேலைகள் காரணமாக, அது எப்போது துவங்கும் என்று இன்னும் தெரியவில்லை என்றார்.