Tuesday, October 8, 2024

நடக்க முடியாமல் தவித்த ரவீந்தர்…பிக்பாஸ் வீட்டில் ரவீந்தர் சந்திரசேகருக்கு என்னதான் ஆச்சு? #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளிலேயே சாச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர். அதன் பிறகு இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது. இதில் முத்துக்குமரன், ஜாக்குலின், ரவீந்தர் சந்திரசேகர், ரஞ்சித், சவுந்தர்யா அருண் பிரசாத் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யாருக்கு குறைவான வாக்குகள் கிடைத்திருக்கும் அந்த நபர், இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி முன்னிலையில் எலிமினேட் செய்யப்படுவார்.

மேலும், நேற்று கேப்டன் தேர்வு செய்வதற்கான போட்டி நடந்தது. அப்போது ஆண்களும் பெண்களும் அங்குள்ள நாற்காலிகளில் மியூசிக் சார் போட்டி போல், யார் முதலிடத்தில் வருகிறார்களோ அவர்கள் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்த போட்டியில் ரவீந்தர் சந்திரசேகர் முதலில் வெளியேறினார். மற்றவர்கள் விரைவாக ஓடி சென்று இருக்கைகளை பிடிக்க, ரவீந்தரால் ஓட முடியவில்லை. இதனால் அவர் காலில் காயம் ஏற்பட்டு, வலியில் துடித்தார். பின்னர் அவருக்கு மருந்தளிக்கப்பட்டு, வலிநிவாரணி மாத்திரை கொடுக்கப்பட்டு மருத்துவகுழுவின் கண்காணிப்பில் பிக்பாஸ் வீட்டில் உள்ளார்.

இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் அவரை கைதாங்கி அழைத்து சென்று படுக்கையில் அமர வைத்தனர். தொடர்ந்து அவருக்கு கால் வலி இருந்து வருவதால், அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News