நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ‛இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.