நடிகர் பிருத்விராஜ் தமிழில் ‘கனா கண்டேன்’, ‘பாரிஜாதம்’, ‘மொழி’, ‘சத்தம் போடாதே’, ‘கண்ணாமூச்சி ஏனடா’, ‘வெள்ளித்திரை’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் அவர், அங்கே அதிக ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டில் வெளியான அவரது ‘ஆடு ஜீவிதம்’ மற்றும் ‘குருவாயூர் அம்பலநடையில்’ படங்கள் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றன.

இதேவேளை, பிருத்விராஜ், மோகன்லாலை மையமாகக் கொண்டு ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மேலும், 2017-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் கிடந்த பிருத்விராஜின் ‘காளியன்’ திரைப்படம் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காளியன் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.