Wednesday, October 9, 2024

சிவப்பு நிற உடையில் மின்னும் நயன்தாரா… வைரலாகும் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நயன்தாரா சமீப காலமாக தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உடன் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் வாங்கிய வீட்டில் குடியேறியுள்ள நயன்தாரா, அங்கு ஒரு புதிய போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.  

அந்த வீட்டில் பழங்கால பொருட்களும் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிவப்பு நிற பட்டுப் புடவை அணிந்து, தலையில் மல்லிகை பூச்சூடி, மங்களகரமான தோற்றத்தில் போட்டோஷூட்டை நடத்தி இருக்கிறார் நயன்தாரா. இந்த புடவையை இயக்குனர் விஷ்ணுவர்தனின் மனைவி அனு வடிவமைத்துள்ளார்.  

அவர் நடத்தி வரும் கைத்தறி ஆடை விற்பனை நிலையத்துக்காக இந்த போட்டோஷூட் புரமோஷனாக நடத்தப்பட்டது. இந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியிடப்பட்டதும் லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும், நயன்தாரா தற்போது “மண்ணாங்கட்டி சின்ஸ் 1960” மற்றும் “டியர் ஸ்டூடண்ட்ஸ்” போன்ற படங்களில் நடித்திருக்க, அடுத்ததாக சுந்தர்.சி இயக்கும் “மூக்குத்தி அம்மன்-2” படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார்.

- Advertisement -

Read more

Local News