நடிகை நயன்தாரா வெளிநாடுகள் செல்வதற்கு அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு நாடுகளுக்கு தனியாகவும், அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடம் அல்லது குழந்தைகளுடன் சேர்ந்து சென்று வந்துள்ளார். சமீபத்தில் அவர் பாரிஸ் சென்றிருந்தார், அந்தப் பயண புகைப்படங்களையும் வழக்கம்போல சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

பொதுவாக, நயன்தாரா தனது கணவருடன் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களையே அதிகமாக பகிருவார். ஆனால், இந்த சமீபத்திய புகைப்படங்களில் அவர்கள் இல்லாததால், சிலர் இதைப் பயன்படுத்தி தவறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள்.
மேலும், மனதளவில் நயன்தாரா சில மாதங்களாக சோகமாகவே இருக்கிறாராம். காரணம், வெற்றிப்படம் கொடுத்து நீண்ட நாட்களாக் ஆகிவிட்டது. முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் தற்போது அவர் பெரிய பங்கு பெறுவதில்லை. பெரும்பாலும் கதையின் முக்கிய மையமாகவே தான் அவர் நடிப்பது வழக்கம். எனவே, இப்போது தனக்கு ஒரு வெற்றிப்படம் அவசியம் தேவைப்படுகிறதென அவர் தோழிகளிடம் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. நல்ல கதையும், திறமையான குழுவும் அமைய வேண்டும், அந்த படத்தை நானே தயாரிக்கவும் தயார் என்கிற நம்பிக்கையுடன் நயன்தாரா இருக்கிறாராம்.