Touring Talkies
100% Cinema

Wednesday, May 28, 2025

Touring Talkies

‘நரி வேட்டை ‘ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிறுவயதில் தனது அப்பாவை இழந்த டோவினோ தாமஸ், தனது Ammavin அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் வளர்கிறார். கல்லூரி முடித்த பிறகு, தனது விருப்பமான வேலைக்காக காத்திருக்கும் நிலையில், அவரே இருக்கும் ஊரைச் சேர்ந்த பிரியம்வதா கிருஷ்ணனை காதலிக்கிறார். வங்கியில் பணிபுரியும் பிரியம்வதாவை, டோவினோவுக்கு திருமணம் செய்து வைக்க, அவருடைய தந்தை மறுக்கும் நிலை உருவாகிறது. இதனைத் தொடர்ந்து, காதலியின் வற்புறுத்தலும், அம்மாவின் வேண்டுகோளும் காரணமாக, டோவினோ ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பணியை ஏற்கிறார். அவர் ரிசர்வ் போலீஸ் பயிற்சிக் காவலராக சேருகிறார். அங்கு அவருடன் தலைமை காவலராக சுராஜ் வெஞ்சாரமூடு பணியாற்றுகிறார்.

இந்நிலையில், வயநாடு பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள், தங்களுக்குத் தேவையான வாழ்வாதார வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கையுடன் அரசாங்க நிலத்தில் அமர்ந்து பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசாங்கம் ரிசர்வ் போலீசைப் பணி நியமிக்கிறது. அந்தப் படையில் டோவினோவும், சுராஜும் இடம் பெறுகிறார்கள். அவர்களது ஆபரேஷனுக்குத் தலைமை அதிகாரியாக சேரன் நியமிக்கப்படுகிறார்.

இந்தச் சூழலில், போராட்டக்காரர்களுடன் நக்சலைட் தீவிரவாதிகள் கலந்திருக்கிறார்கள் என வந்த தகவலின் அடிப்படையில், போலீஸ் படை காட்டுப் பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது. இரு பிரிவுகளாக பிரிந்து, டோவினோ ஒரு வழியாகவும், சுராஜ் மற்றொரு வழியாகவும் செல்கின்றனர். அதே நாள் மாலை டோவினோ மீண்டும் திரும்புகிறார். ஆனால், சுராஜ் திரும்பவில்லை. இதையடுத்து, சேரனின் உத்தரவின்படி, டோவினோ தாமஸ் உட்பட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். அந்த வேட்டையின் போது, சுராஜ் கொலை செய்யப்பட்ட நிலையில் மலைப்பகுதியில் காணப்படுகிறார். இதனால் அங்கு பெரும் கலவரம் உருவாகிறது. அந்தக் கலவரத்திற்கு பின்னர், டோவினோ தாமஸை போலீசார் தேடத் தொடங்குகிறார்கள். இதற்குப் பின்னணி என்ன? சுராஜை கொன்றது யார்? டோவினோவை ஏன் போலீசார் தேடுகிறார்கள்? அந்தக் கலவரத்திற்கு உண்மையான காரணம் யார்? என்பதே படத்தின் மீதிக் கதை.

மலைவாழ் மக்களின் வாழ்வாதார பிரச்சனையைக் கொண்டு, அரசும் காவல்துறையும் எப்படி நடந்து கொள்கின்றன என்பதை மையமாகக் கொண்டு, சிறப்பான திரைக்கதையில் இயக்கியுள்ளார் இயக்குனர் அனுராஜ் மோகன். கதைக்களமாக வயநாடு பகுதியை எடுத்துக் கொண்டு, அந்தக் கதை 2003ஆம் ஆண்டு நடைபெற்றதாக திரையில் காட்டியிருக்கிறார். அரசியல்வாதிகள் மற்றும் போலீசாரின் உள்நடப்புக்களை மிகவும் நுணுக்கமாக படம் பிடித்துள்ளார். மலையாளம் மற்றும் தமிழில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். சமீபத்திய மலையாள இயக்குனர்களின் கதை சொல்லும் விதத்தில் நிகழ்ந்துள்ள மாற்றத்தில், இந்த இயக்குனருக்கும் ஒரு முக்கியமான இடம் கிடைக்கும் என்பது உறுதி.

2008ஆம் ஆண்டு ‘2008’ படத்திற்கு பிறகு, தனக்கென தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் டோவினோ தாமஸ், இந்தப் படத்தையும் சிறப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளார். ரிசர்வ் போலீசராக அவர் நடிப்பில் அழுத்தம் தென்படுகிறது. ஆக்ஷனுடன் உணர்வுப்பூர்வமான மனிதாபிமானம் கலந்து, அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக, சுராஜ் வெஞ்சாரமூடு தனது அனுபவமுள்ள நடிப்பின் மூலம் அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோல், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சேரன், தன்னுடைய தேர்ந்த நடிப்பை மட்டுமல்லாது, ஒரு விதமான சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் சிறந்து விளங்கியுள்ளார். ஹீரோயினாக நடித்துள்ள பிரியம்வதா கிருஷ்ணன், தன்னுடைய கதாபாத்திரத்துக்கேற்ப முழுமையாக பதிலளிக்கிறார். இவர்களுடன் நடித்த மற்ற நடிகர்களும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். விஜய் மேற்கொண்ட ஒளிப்பதிவு, கேரளாவின் இயற்கைக் காடுகளை அழகாக படம் பிடித்திருக்கிறது. அதோடு, நடிகர்களையும் திரையில் திகழ்வதற்கான சிறந்த அமைப்பை உருவாக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் வழங்கிய இசை, இந்தப்படத்திற்கு மேலும் ஒரு தனிப்பட்ட பரிமாணத்தைச் சேர்த்திருக்கிறது.

- Advertisement -

Read more

Local News