Monday, October 14, 2024

மோதிக்கொண்ட முத்துக்குமரன் அன்ஷிதா… அணிமாறும் தீபக் தர்ஷா என்ன நடக்கப்போகிறது இந்த வாரம்! #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் சீசன் 8ல் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில், ரவீந்தர், ஜாக்குலின், முத்துக்குமார், சௌந்தர்யா, அருண் ஆகியோர் போட்டியாளர்களாக இருந்தனர். குறைந்த வாக்குகளை பெற்று, ரவீந்தர் வெளியேறினார். வெளியே வந்த உடனே, “பாருடா, என் ஆட்டம்” என கூறுவது போல, உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளரையும் தனித்தனியாக விமர்சித்து அனைவரையும் அதிர வைத்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டது, அதில் இரண்டாவது நாமினேஷன் பிராசஸில், ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பிக்பாஸ் அறிவித்தார். இதில் பெரும்பாலானோர் ரஞ்சித், சௌந்தர்யா, ஜெஃப்ரி, சாச்சனா ஆகியோரின் பெயர்களை நாமினேட் செய்துள்ளனர்.

இரண்டாவது ப்ரோமோவில், அன்ஷிதாவுக்கும், ஆண்கள் அணியில் இருந்து முத்துக்குமரனுக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், அன்ஷிதா முத்துக்குமரனை நோக்கி, “உன் செயல் எனக்கு பிடிக்கவில்லை. இனிமேல் நல்லவனாக நடிக்க வேண்டாம்” என்று கூறுகிறார்.மூன்றாவது ப்ரோமவில் பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை சொல்கிறார் அதாவது இரண்டு அணிகளில் இருந்தும் ஒருவர் அணி மாறவேண்டும் என்று அதன் படி ஆண்கள் அணியில் இருந்து தீபக் மற்றும் பெண்கள் அனைவரும் தர்ஷா ஆகியோர் அணி மாறுகின்றனர். பல பிளான்களோடு செல்லும் இருவர் என்ன செய்ய போகிறார்கள் என்பது இந்த வாரத்தில் தான் தெரியும்.

- Advertisement -

Read more

Local News