புஷ்பா 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் AA22XA6 படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் இணைந்துள்ளார் என அதற்கான அறிவிப்பு வீடியோவுடன் வெளியானது.

இந்த திரைப்படம் முழுவதுமாக ஃபேண்டசி ஆக்ஷன் பாணியில் உருவாகவுள்ளதால், படப்பிடிப்பில் பல விசுவல் எஃபெக்ட் (VFX) நிபுணர்கள் பங்கேற்றுள்ளார்கள். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகை மிருணாள் தாக்கூர் தற்போது படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னர், இந்தப் படத்தில் ஐந்து நாயகிகள் நடிக்கவிருக்கின்றனர் என தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.