மோகன்லால் தற்போது மலையாளத்தில், பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘லூசிபர்’ இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், அந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களில் தொடரும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மற்றொரு பக்கம் மோகன்லால் நடித்து வரும் அவரது 360வது படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியிருக்கிறது.
இந்த படத்தில் மோகன்லாலுடன் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்கிறார் நடிகை ஷோபனா. இந்த படத்தை தருண் மூர்த்தி என்பவர் இயக்குகின்றார்.
தருண் மூர்த்தி கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் வெளியான மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஆபரேஷன் ஜாவா’ மற்றும் ‘சவுதி வெள்ளக்கா’ ஆகிய படங்களை இயக்கியவர். இந்த புதிய படத்தில் மோகன்லால் ஒரு பழைய ‘அம்பாசிடர்’ காரை ஓட்டும் சண்முகம் என்கிற டிரைவரின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.