தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாவார் ரகுல் பிரீத் சிங். இவர் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் கவர்ச்சியிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘‘திருமணம் என்பது எந்த நடிகையின் வளர்ச்சிக்கும் அல்லது முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்காது. திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டுவதிலும் எந்த தவறும் இல்லை.
உண்மையைச் சொல்லப்போனால், திருமணத்திற்குப் பிறகு தான் எனது அழகும் கவர்ச்சியும் மேலும் அதிகரித்துள்ளதாக உணர்கிறேன். கவர்ச்சியை ரசிப்பதில் எந்த குற்றமும் இல்லை என்று பதிலளித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.