மலையாள திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்துடன் காரில் பெங்களூரு நோக்கி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து வந்தார்.

அப்போது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பாறையூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த வேளையில், அவரது கார் மீது ஒரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காரில் பயணித்த அவரது தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில், ஷைன் டாம் சாக்கோ, அவரது தாயார் மரியா கார்மல் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கடுமையான காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஷைன் டாம் சாக்கோ தமிழில் ‘குட் பேட் அக்லி’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.