தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் தான் நடித்த முதல் படமான தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்தில் பங்கேற்ற லெஜெண்ட் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தபோது, என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும் மற்ற பணிகளும் முடிவடையும்.
ஆக்சன், சஸ்பென்ஸ் நிறைந்த இந்த படத்தை தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்றுள்ளார்.