டைனோசர்கள் கொடூர மிருகமாகவும், அவற்றை அழிக்க மனிதர்கள் போராடுவது மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது வெளிவர இருக்கும் ‘ஜூராசிக் பார்க்: ரீ பார்ன்’ படம் இதற்கு முற்றிலும் மாறான ஒரு கதையுடன் வருகிறது.குறிப்பாக அமைதியாக வாழும் டைனோசர்களை மருத்துவ ஆய்வுக்காக மனிதர்களின் சுயநலத்திற்காக எப்படி அழிக்கப்பட்டன என்றவாறு இந்த கதை அமைந்துள்ளதாம்.பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் கதைக்களம் என இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது. எம்மி விருது வென்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். வரும் ஜூலை 4 அன்று வெளியாகிறது.
