Thursday, October 24, 2024

இயக்குனராக அவதாரம் எடுத்த ஜோஜூ ஜார்ஜ்… பனி படத்தின் மூலம் மின்னினாரா ?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கிய “பனி” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஜோஜு ஜார்ஜ் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஆவார். தமிழில் அவர் “ஜகமே தந்திரம்” படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும், “சூர்யா 44” மற்றும் கமலுடன் “தக் லைஃப்” படத்தில் நடித்துள்ளார். அவர் நடிகராக மட்டுமல்லாமல், 7 திரைப்படங்களை தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன் அவர் இயக்குநராகவும் மாறி, “பனி” என்ற படத்தை இயக்கி, அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் வந்தார். இந்தப் படத்தில் “நாடோடிகள்” புகழ் அபிநயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், “பனி” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஜோஜு ஜார்ஜின் முதல் இயக்கமாக இருப்பதால், அவரது ரசிகர்கள் இந்த படத்தை பலத்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருந்தனர்.

ஆனால், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சிலர் சண்டைக்காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸ் பிரமாதமாக இருப்பதாக பாராட்டினாலும், சிலர் கதையில் உணர்வுகள் சரியாகக் கடத்தப்படவில்லை என விமர்சனம் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News