Monday, October 14, 2024

நான் ரொமான்டிக் படம் எல்லாம் எடுக்க 5 வருடம் ஆகும்…. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன் பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கினார். தற்போது, ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் “கூலி” படத்தை இயக்கி வருகிறார். இந்த நேரத்தில், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் “வெட்டு, குத்து, ரத்தம் இல்லாமல் காதல் கதையில் எப்போது படம் எடுப்பீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அவர் பதில் அளிக்கையில், “நான் இப்போது இயக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால், அதே கோணத்தில் யோசித்துக்கொண்டு இருக்கிறேன். ‘கூலி’ படத்தின் பிறகு, ‘விக்ரம்’ படத்தில் உள்ள ரோலக்ஸ் கதாபாத்திரத்தை இன்னும் பெரிய அளவுக்கு வளர்த்துப் பண்ணி, அதைப் பொருத்தமான ஒரு படம் எடுக்கப் போகிறேன்.

அதற்கு அடுத்தபடியாக ‘கைதி 2’ இயக்கப் போகிறேன். இப்படி நான் கமிட் ஆன படங்களை முடிக்க இன்னும் ஐந்து வருடங்கள் ஆகும். அதற்குப் பிறகு தான், நான் ரொமான்ஸ் மற்றும் காதல் கதையில் ஒரு படம் எடுப்பேன்” என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News