மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘தக்லைப்’ திரைப்படத்தில் திரிஷா பாடகியாக வருகிறார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், அவர் போலீசாகவும் வருகிறாராம். அது சஸ்பென்ஸான விஷயம் என்றும் கூறப்படுகிறது. தக்லைப் கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட கதை என்பதால், போலீஸ் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்தவகையில் கதையை நகர்த்துபவராக திரிஷா இருக்கிறார்.

இதற்கு முன்பு ‘பிருந்தா’ என்ற வெப்சீரியலில் திரிஷா போலீசாக நடித்து இருக்கிறார். இதில் அதைவிட கனமான வேடம் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் தற்போது பிசியாக வலம்வரும் நடிகைகள் சிலர் போலீஸ் வேடங்களில் நடிக்கிறார்கள். அதில், சில படங்களில் ஹோம்லியான வேடத்தில் நடித்து வந்த பிரகிடா சாகா, விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ படத்தில் போலீசாக நடித்துள்ளார். மூக்குத்தி அம்மன் 2ல் அம்மன், போலீஸ் என 2 வேடத்தில் நயன்தாரா நடித்து வருவதாக கூறப்படுகிறது.