நடிகை ஜெனிலியாவின் புதிய திரைப்படங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகவுள்ள தகவல், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ‘பாய்ஸ்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘உத்தமபுத்திரன்’, ‘வேலாயுதம்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்திருந்த ஜெனிலியா, இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்த காலத்திலேயே, இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அதன் பின்னர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து இடைவேளையை எடுத்திருந்த ஜெனிலியா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற திரைப்படத்தில், அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதன் பின்னர், நடிகை ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள ‘ஜூனியர்’ என்ற திரைப்படத்திலும் ஜெனிலியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.