Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

தள்ளிப்போகிறதா மூக்குத்தி அம்மன் 2ன் படப்பிடிப்பு? என்ன காரணம்?‌ உலாவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டிருக்கும் சுந்தர் சி, தமிழ் சினிமாவில் நீண்ட ஆண்டுகளாக மாஸாக இயங்கி வருகிறார். அவர் முதலில் இயக்குநராகவே திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால், ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும், தன் மனைவி குஷ்பூவுடன் இணைந்து தயாரிப்பாளராகவும் மாறினார். சமீபத்தில் அவர் இயக்கிய ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானபோது, எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், வடிவேலு மற்றும் சுந்தர் சி இணைந்து நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அதன் பிறகு, அவர் இயக்கும் அடுத்த படமாக ‘கலகலப்பு 3’ இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும், அதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் முன்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கான தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆக இருந்தபோதிலும், சம்பளத்திற்குப் பதிலாக, படத்தின் லாபத்தில் ஒரு சதவீதம் பங்காக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால், இப்படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல, நயன்தாரா முழுமையாக ஒத்துழைக்காத சூழல் உருவாகியிருக்கிறது. அவர் இதுவரை படத்திற்கான கால்ஷீட்டை ஒதுக்கவில்லை என்பதால், படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. இதனால், முதலில் நயன்தாராவிடம் கால்ஷீட் வாங்குமாறு, சுந்தர் சி அவரிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News