விடுதலை 2 திரைப்படத்திற்குப் பிறகு, ஏஸ், ட்ரெயின் திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் திரைப்படத்தித் நடித்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, அதன் பின்பு பூரி ஜெகந்நாத் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு, அவர் மீண்டும் நிதிலன் சாமிநாதன் இயக்கும் மற்றொரு புதிய படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

முன்னதாக நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம், 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, உலகளாவிய வசூலில் (சீனாவையும் உள்ளடக்கியது) 190 கோடி ரூபாயை எட்டியது.
இந்நிலையில், சமீபத்தில், மகாராஜா படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் கூறி அவரிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ள நிதிலன் சாமிநாதன், தற்போது அந்தப் படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகளில் முழு மனதுடன் ஈடுபட்டு வருகிறார். இந்த புதிய தொடரியல் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.