நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவாகும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதற்குப் பிறகு, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனிடையே, ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றுகிறார். இது சூர்யாவின் 46வது திரைப்படமாக உருவாகின்றது. சமீபத்தில் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 85 கோடிக்கு வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யாவின் படங்களில் இதுவரை அதிக விலைக்கு விற்ற டிஜிட்டல் உரிமம் இதுவாகும். இதற்குக் காரணமாக, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் OTT தளத்தில் பெற்ற மாபெரும் வரவேற்பு தான் என்று கூறப்படுகிறது. அதே ஓட்டத்தில்தான் இப்புதிய படமும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.