கமல்ஹாசன் இயக்கியும் நடித்த விஸ்வரூபம் படத்தின் வெற்றிக்கு முக்கியமான கலைஞர்களில் ஒருவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய மகேஷ் நாராயணன். அதன் பின்னர், அவர் மலையாள சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, பஹத் பாசிலை வைத்து டேக் ஆஃப், சி யூ சூன், மாலிக் மற்றும் உயரே போன்ற திரைப்படங்களை இயக்கினார்.

இப்போது அவர் மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகர்களுடன் புதிய ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடித்தவுடன், அடுத்ததாக மகேஷ் நாராயணன் பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கான ஒரு ஆரம்பக்கட்ட விரிவான கதையை சல்மான் கானிடம் அவர் கூறியிருக்கிறார். அந்தக் கதை சல்மான் கானுக்கு மிகவும் பிடித்ததாகவும், அதன் முழு ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்து கொண்டு வரும்படி அவர் கேட்டதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை சல்மான் கானின் சகோதரி மற்றும் அவரது கணவர் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.